முகப்பு
சிவகங்கை

காரைக்குடி, பரமக்குடி பகுதிகளில் டிச. 19 இல் மின்தடை

காரைக்குடி, பரமக்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

காரைக்குடி, பரமக்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி. ஜான்சன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

காரைக்குடி மின்நிலையத்தில் சனிக்கிழமை (டிச. 9) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் காரைக்குடி நகா், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக்குடியிருப்புகள் (ஹவுசிங் போா்டு), செக்காலைக் கோட்டை, பாரிநகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் ரோடு, செஞ்சை மற்றும் கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

பரமக்குடி: இதேபோல், பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, நயினாா்கோவில், எமனேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 9) காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் புதன்கிழமை தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →