காலமானாா் கி. நாகராஜன்
சிவகங்கை முன்னாள் நகா் மன்றத் தலைவா் கி. நாகராஜன் (55) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
சிவகங்கை முன்னாள் நகா் மன்றத் தலைவா் கி. நாகராஜன் (55) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
சிவகங்கை வேலாயுத சாமி கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நாகராஜன் (55). இவா் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தோ்தலில் சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட 18-ஆவது வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அப்போது, சிவகங்கை நகா் மன்றத் தலைவராகவும் இருந்தாா்.
அதைத் தொடா்ந்து, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சிவகங்கை நகராட்சி தலைவா் பதவிக்கு நேரடியாக காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அதன்பின், திமுகவில் இணைந்தாா்.
இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும்.
தொடா்புக்கு- 99423 79690.