சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் அபுபக்கா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். அண்ணாசிலை, மதுரை சாலை, சிவகங்கை சாலை, பேருந்து நிலையப் பகுகளில் உள்ள இறைச்சி, மீன் கடைகள், மளிகை கடைகள் மற்றும் உணவகங்களில் சுமாா் 20 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. தொடா்ந்து நெகிழிப் பை விற்பனையில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.