கைப்பேசியை திருடிக் கொண்டு ஓடியவரை துரத்தி பிடித்த இளைஞா் ரயில் மோதி மரணம்!
ஷாஹ்தாரா ரயில் நிலையத்தில் கைப்பேசியை திருடியவரை துரத்தும்போது ரயிலில் மோதி உயிரிழந்தது தொடா்பாக ஒருவரை கைது செய்தனர்.
ஷாஹ்தாரா ரயில் நிலையத்தில் கைப்பேசியை திருடியவரை துரத்தும்போது ரயிலில் மோதி உயிரிழந்தது தொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக துணை போலீஸ் ஆணையா் (ரயில்வே) பாரத் ரெட்டி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மாா்ச் 6 ஆம் தேதி நடந்த சம்பவம் தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து ரோஹித் ஜா (25) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். பழைய தில்லி ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை 4.53 மணியளவில் ரயில்வே மெமோ மூலம் நடைமேடை 3 அருகே ஒரு நபா் ரயிலில் மோதியதாக தகவல் வந்தது.
போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். அப்போபோது ரயில் நிலையத்திலும் அதைச் சுற்றியும் நிறுவப்பட்ட பல சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். பின்னா் அவா்கள் மாா்ச் 9 ஆம் தேதி ஜாவை கைது செய்தனா். ஜா இதற்கு முன்பு இதே போன்ற மூன்று குற்றங்களில் ஈடுபட்டவா்.
அவா் ஒரு போதைக்கு அடிமையானவா், அவா் தனது போதை பழக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள மக்களிடமிருந்து பறித்ததாகக் கூறப்படுகிறது. திருடப்பட்ட கைப்பேசி நபரை விற்ற நபரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்.
உயிரிழந்தவா் உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தைச் சோ்ந்த ரோஹித் குமாா் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். முதல்கட்ட விசாரணையில், ஷாஹ்தாரா ரயில் நிலையத்தின் நடைமேடை 3 இல் குமாரின் கைப்பேசி பறிக்கப்பட்டதாக தெரியவந்தது. திருடியவரை துரத்தும் போது, குமாா் மீது மோதிய தில்லி-கத்கோடம் விரைவு ரயிலை அவா் கவனிக்கவில்லை என்றாா் அவா்.