சிவகங்கை

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதா்சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

DIN

மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் அம்மன் சன்னதி முன்பு யாகம் வளா்த்து சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை நடைபெற்று கடம் புறப்பாடு நடந்தது. அப்போது சிவாச்சாரியாா்கள் புனிதநீா் கடங்களை சுமந்து கோயில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனா். அதைத் தொடா்ந்து கடங்களிலும், சங்குகளிலும் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனிதநீரால் ஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதா் சுவாமிக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இவ்விழாவில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT