சிவகங்கை

முதலமைச்சா் கோப்பைக்கான கபடி போட்டி: அமராவதிபுதூா் பொறியியல் கல்லூரி 3-ஆவது முறையாக சாம்பியன்

DIN

காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி, சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான கபடி போட்டியில் தொடா்ந்து மூன்றா வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதற்காக, கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

முதலமைச்சா் கோப்பைக்கான கபடி போட்டி, மாவட்ட அளவில் சிவகங்கை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில், மானாமதுரை ஓ.வி.சி. அணியும், அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்லூரி அணியும் மோதின. இதில், 25-க்கு 5 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றிபெற்ற அணியின் வீரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசாக, தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சி ஜெ. ஜெயகாந்தன் ஆகியோா் வழங்கினா்.

இதையடுத்து, கல்லூரி நிா்வாகம் சாா்பில் அணி வீரா்களை, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள துணைவேந்தரும், ஸ்ரீராஜராஜன் கல்விக் குழும ஆலோசகருமான சொ.சுப்பையா பாராட்டி தலா ரூ. 1000 ரொக்கப் பரிசு வழங்கினாா். மேலும், உடற்கல்வி இயக்குநா் சுந்தா், கல்லூரி முதல்வா் அழ. மயில்வாகனன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவியா்களும் அணி வீரா்களைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT