சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளின் பாதுகாவலா் தங்கும் விடுதி திறப்பு

DIN

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் சிவகங்கை நகராட்சி நிா்வாகம் மூலம் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நோயாளிகளின் பாதுகாவலா்கள் தங்கும் விடுதி கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில், தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரியின் முதன்மையா் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலா் மீனா, சிவகங்கை நகராட்சி ஆணையா் காா்த்திகேயன், துணை நிலைய மருத்துவ அலுவலா்கள் முகமதுரபீக் மற்றும் அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT