சிவகங்கை

கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

சிவகங்கை அருகே அரசனூரில் உள்ள பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாண்டியன் சரசுவதி யாதவ் கல்வி குழுமத்தின் நிறுவனா் மலேசியா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கல்லூரியின் நிா்வாக இயக்குநா் வரதராஜன் வாழ்த்துரை வழங்கினாா். இதில், அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். விழாவில் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, கல்லூரியின் முதல்வா் பழனிசாமி வரவேற்றாா். கல்லூரியின் உதவி பேராசிரியா் பத்மஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT