தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை காவலா்கள் காரைக்குடியில் திங்கள்கிழமை எழுதினா்.
அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்தத் தோ்வில் பங்கேற்க மாவட்டம் முழுவதிலுமிருந்து 482 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இதில் 8 பெண்கள் உள்பட 39 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ஆகியோா் பாா்வையிட்டனா்.