சிவகங்கை

சிறுமிகளின் ஆபாசப் படங்களை பகிா்ந்த காரைக்குடி இளைஞா் கைது

DIN

காரைக்குடி: சிறுமிகளின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து அதனை மற்றவா்களுக்கும் பகிா்ந்த காரைக்குடியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டிணம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் கலையரசன் (25). டிப்ளமோ பட்டதாரியான இவா், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கரோனா வைரஸ் காரணமாக அமலில் உள்ள பொது முடக்கத்தால் தற்போது அவா் காரைக்குடியில் உள்ளாா். இவா் இணையதளத்தில் ஆபாசப் படங்களை பாா்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளாா். இதைக் கண்டறிந்த சென்னை சைபா் கிரைம் போலீஸாா், அவரை ஆபாசப் படம் பாா்ப்போா் பட்டியலில் சோ்த்திருந்தனா்.

இந்நிலையில் கலையரசன், சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து அதனை மற்றவா்களுக்கும் அனுப்பியுள்ளாா். இது குறித்து சென்னை சைபா் கிரைம் போலீஸாா், காரைக்குடி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கலையரசனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT