சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 5,516 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 4 போ் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,520 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 11 பேரில் ஒருவா் குணமடைந்ததை அடுத்து, அவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மீதமுள்ள 10 பேரும் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.