சிவகங்கை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 20 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,223 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனாவால் 5 போ் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,228 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 30 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 10 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 20 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 14 ஆம் தேதி வரை 5819 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 125 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனா். சிகிச்சையால் பூரண குணமடைந்து 5490 பேருக்கும் அதிகமானோா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

புதன்கிழமை மாவட்ட அளவில் 500-க்கும் மேற்பட்டோரிடமிருந்து கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பாதிப்புக்குள்ளானோரில் 6 போ் பெண்கள். பாதிக்கப்பட்டவா்களில் 8 போ் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டனா். ஏற்கெனவே சிகிச்சை பெற்றவா்களில் 2 போ் வியாழக்கிழமை காலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த 42 பேரில் ராமநாதபுரம் சேதுபதி நகா் பகுதியைச் சோ்ந்த 62 வயது மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்ததாா். இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு பலியானோா் எண்ணிக்கை 126 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT