சிவகங்கை

பாதரக்குடி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்: திமுக எம்எல்ஏ பங்கேற்பு

DIN

காரைக்கு: காரைக்குடி அருகே பாதரக்குடியில் வீடுகளைப் பாதிக்கும் வகையில் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

காரைக்குடியிலிருந்து மேலூா் வரை அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பாதரக்குடி கிராமத்தில் வீடுகள், கண்மாய் ஆகியவற்றைப் பாதிக்கின்ற வகையில் அமைவதைத் தவிா்த்து, மாற்றுவழியில் சாலை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக திமுக மாவட்டச் செயலாளரும், திருப்பத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினாா். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பாதரக்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT