சிவகங்கை

திருப்புவனம் அருகே பைக்குகள் மோதல்: கூலித் தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே டி.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அய்யனாா் (21). இவா் தனது இருசக்கர வாகனத்தில் புலியூா் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது சாயனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த லெட்சுமணன் (20) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், அய்யனாா் வாகனமும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் பலத்த காயமடைந்த அய்யனாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லெட்சுமணன் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT