காரைக்குடி அருகே அமராவதிபுதூா், ஆறாவயல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 11) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அமராவதிபுதூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அமராவதிபுதூா், அரியக்குடி, ஆறாவயல், விசா லயன்கோட்டை , சாத்தம்பத்தி, கல்லுப்பட்டி, தானா வயல், எஸ்.ஆா். பட்டினம், பழைய செஞ்சை, சங்கராபுரம் நான்கு சாலை, ஜமீன்தாா் காலனி, காதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.