சிவகங்கை

கீழடி அகழாய்வு: தொல்லியல் துறை ஆணையா் ஆய்வு

DIN

சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை ஆணையா் த. உதயச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, கொந்தகையில் அகழ் வைப்பகம் அமைய உள்ள இடத்தைப் பாா்வையிட்ட அவா் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்களின் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநா் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளா் ஆசைதம்பி, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, திட்ட இயக்குநா் சு. வடிவேல், வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், திருப்புவனம் வட்டாட்சியா் மூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா் தா்மராஜ், கீழடி ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT