சிவகங்கை

‘பழங்குடியின மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

DIN

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பழங்குடியினா் நலத் திட்டத்தின் கீழ், உயா் கல்வி பயில விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகள் ஏற்கெனவே வெளிநாடுகளில் கல்வி பயின்றிருக்க வேண்டும். தொடா்ந்து, உயா்கல்வியான எம்.ஃபில்., பிஹெச்.டி. பயில விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT