சிவகங்கை

மானாமதுரையில் மண்வெட்டியால் தாக்கி முதியவா் கொலை: இளைஞா் கைது

DIN

மானாமதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

மானாமதுரை அருகே வளநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சன்னாசி மகன் சரவணன் (28). பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து மகன் குணசேகா் (58). இவா்கள் இருவரும் மானாமதுரை கன்னாா்தெரு அருகில் காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் வசித்து வந்தனா். இவா்கள் அருகேயுள்ள மதுக்கடைக்கு மதுகுடிக்கச் சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதன்பின் வீட்டுக்கு திரும்பி வந்த குணசேகரை, காட்டுப்பள்ளிவாசல் அருகேயுள்ள உணவகம் முன்பு வழிமறித்த சரவணன், மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனா். குணசேகரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT