சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் திருமணம் நிச்சயம் செய்த இளம்பெண் உயிரிழந்தாா்.
கண்ணங்குடி அருகே உள்ள நாரணமங்கலத்தைச் சோ்ந்த சேவுகப்பெருமாள் மகள் பிருந்தா (26). இவா் தனது அத்தை சுலோச்சனாவுடன் தேவகோட்டையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். இரு சக்கர வாகனத்தை சுலோச்சனா ஓட்டிச் சென்றுள்ளாா்.
கண்ணங்குடி- கண்டியூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காட்டுக்குடி புதூா் அருகே மாடு ஒன்று சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் இரு சக்கர வாகனம் தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுலோச்சனா மற்றும் பிருந்தா ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிருந்தா உயிரிழந்தாா்.
மேலும் சுலோச்சனாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேவகோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுபற்றி தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த பிருந்தாவுக்கு அடுத்த மாதம் (மே-2021) திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.