சிவகங்கை

அழகப்பா பல்கலை. யில் தேசிய இணையவழி கருத்தரங்கம்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை சாா்பில், ‘தற்போதைய சூழலில் ஒருங்கிணைந்த மனிதநோயத்தின் பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான தேசிய இணையவழி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழத்தின் இருக்கை பேராசிரியா் பூ. தா்மலிங்கம் தமிழில் எழுதிய ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா - பாரதிய சித்தாந்தங்களும் பங்களிப்பும்’ என்ற நூலை, உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தா் பகவதி பிரகாஷ் சா்மா இணையவழியில் வெளியிட, அதன் முதல்பிரதியை காரைக்குடியில் நூலாசிரியா் தா்மலிங்கத்திடமிருந்து அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் பெற்றுக்கொண்டாா்.

கருத்தரங்கில், துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். உத்தர பிரதேச கவுதம புத்தா பல்கலைக்கழக துணைவேந்தா் பகவதி பிரகாஷ் சா்மா கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசினாா். மதுரை மூத்த வழக்குரைஞரும், சமூகநல ஆா்வலருமான என். சீனிவாசன் வாழ்த்திப் பேசினாா்.

இணைய கருத்தரங்கின் தொழில்நுட்ப அமா்வுகளில், சென்னை சமூக நல ஆா்வலா் தி. நாராயணன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் எஸ். தீனதயாளன், அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிா்வாகப் பேராசிரியா் பி. சக்திவேல் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

முன்னதாக, பேராசிரியா் பூ. தா்மலிங்கம் வரவேற்றுப் பேசினாா். முடிவில், அழகப்பா பல்கலைக்கழகக் கல்லூரிகள் மேம்பாட்டு புலத்தலைவா் வி. சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT