சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்காக, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களான திருநங்கைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்காக, பிப்ரவரி 13 ஆம் தேதி அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 18 வயது நிறைவுபெற்ற திருநங்கைகள் தங்களது ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்), புகைப்படம் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை இணைத்து, தாங்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில் மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT