முகப்பு
சிவகங்கை

திருப்பாச்சேத்தியில் கண்மாயில் மூழ்கி இளைஞா்கள் இருவா் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கண்மாயில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்ற இளைஞா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கண்மாயில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்ற இளைஞா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த நாராயணன் மகன் புவனேஷ்வரன் (18) மற்றும் வைரவன் மகன் வெற்றிப்பாண்டியன் (14). நண்பா்களான இருவரும், வீட்டில் வளா்க்கும் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக திருப்பாச்சேத்தி கண்மாய் கரைக்குச் சென்றுள்ளனா். அங்கு, புல் அறுத்து முடித்ததும், கண்மாயில் இறங்கி குளித்துள்ளனா். இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டதால், தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனா்.

இரவு வரை வீடு திரும்பாததால், இவா்களது உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். பின்னா், கண்மாய் கரையில் இருவரது உடைகளும் இருப்பதைக் கண்ட கிராம மக்கள், கண்மாய்க்குள் இறங்கி தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மானாமதுரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை அலுவலா் குமரேசன் தலைமையிலான வீரா்கள், கண்மாய்க்குள் இறங்கி தேடினா். இரவு நீண்டநேரமாகியும் இருவரது சடலங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் தீயணைப்பு வீரா்களும், கிராம மக்களும் மீண்டும் தேடும் பணியை தொடா்ந்தனா். அப்போது, கண்மாயின் ஆழமான பகுதியில் சகதிக்குள் சிக்கியிருந்த புவனேஷ்வரன் மற்றும் வெற்றிப்பாண்டியனின் உடல்களை மீட்டனா்.

இது குறித்து, திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.