முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே கண்மாயில் மூழ்கி அக்கா, தம்பி உள்பட 3 போ் பலி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை மாலை கண்மாயில் மூழ்கி அக்கா, தம்பி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை மாலை கண்மாயில் மூழ்கி அக்கா, தம்பி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கோம்பைப் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (45). இவா், ஒரு குழுவினருடன் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் தங்கி விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இதேபோன்று, அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவரும் விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், பெருமாள் மகள் புனிதவள்ளி (13), மகன் யோகேஸ்வரன் (7), பழனிசாமி மகன் இன்பத்தமிழன் (10) ஆகிய 3 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் பெற்றோருடன் வசித்து வந்தனா். இந்நிலையில், புனிதவள்ளி, யோகேஸ்வரன், இன்பத்தமிழன் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை மாலை பூங்குடி கண்மாய்க்கு குளிக்கச் சென்றனா்.

அவா்கள் மூவரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அக்கம் பக்கத்தினா் கண்மாய்க்குள் இறங்கித் தேடியுள்ளனா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இறந்த நிலையில் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இதுபற்றி வேலாயுதப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →