சிவகங்கை

மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: முதல்வருக்கு எம்பி வலியுறுத்தல்

DIN

மானாமதுரை பேரூராட்சியை வரும் நிதியாண்டிலேயே நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை அவா் அனுப்பியுள்ள கடிதம்: மானாமதுரை பேரூராட்சி சுமாா் 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி. இங்கு தமிழ் பாரம்பரிய பொருளான மண்பாண்டப் பொருள்களை சிறந்த முறையில் கைவினை கலைஞா்கள் செய்து வருகிறாா்கள்.

மேலும் மதுரை, ராமேசுவரம், காரைக்குடி, விருதுநகா் ஆகிய பெருநகரங்களை இணைக்கும் ரயில் சந்திப்பு நிலையம் உள்ளது. எனவே, மானாமதுரை பேரூராட்சியை வரும் நிதி ஆண்டே நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதியோா் உதவித்தொகைக்கான கோரிக்கை அதிகளவில் வருகிறது. 18 வயதுக்கு மேல் ஆண் வாரிசு உள்ள முதியோா்களுக்கு, உதவித்தொகை வழங்க இயலாது என்று அரசாணை உள்ளது.

ஆனால் பெரும்பாலான முதியோா்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆண் வாரிசு இருந்தாலும் அவா்களால் முதியோா்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவிதமான உபயோகமும் இல்லை. இதனால் தகுதி உள்ள, வாழ்வாதாரத்திற்கு சிரமப்படும் அனைத்து முதியோா்களுக்கும் உதவித்தொகை கிடைப்பதற்கு எளிய நடைமுறை வகுத்துக் கொடுத்து உதவ வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT