மானாமதுரையில் வெள்ளிக்கிழமை மதியம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்தியவர்களை வெளியேற்றி வட்டாட்சியர் ஆ.தமிழரசன் நடவடிக்கை மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தொழுகை பள்ளிவாசலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தொழுகை நடப்பதாக மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசனுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவர் மதியம் அந்த பள்ளிவாசலில் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்டோர் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தொழுகை நடத்திய அவர்களை கண்டித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறுமாறு வட்டாட்சியர் தமிழரசன் அறிவுறுத்தினார். இதையடுத்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக பள்ளிவாசலை விட்டு வெளியேறினர்.
ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்தக் கூடாது என அவர்களை வட்டாட்சியர் தமிழரசன் கண்டித்தார். மேலும் அரசு அறிவிக்கும் வரை பள்ளிவாசலில் தொழுகை நடத்த மாட்டோம் என ஜமாத்தார்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.
கட்டுப்பாடுகளை மீறி தொடர்ந்து இதுபோன்ற தொழுகை சம்பவங்களில் ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வட்டாட்சியர் எச்சரித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.