சிவகங்கை

இளையான்குடி அருகே சான்றிதழ் இல்லாமல் செயல்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனம் மூடல்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெறாமல் செயல்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனத்தை பூட்டி அங்கிருந்த குடிநீா் பாட்டில்களையும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரும்பச்சேரி கிராமத்தின் வைகையாற்றின் கரையோரம் தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் உணவு மற்றும் தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வருவதாக மாநில குடிநீா் வாரியத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலா் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ராஜேஷ்குமாா், தியாகராஜன், முத்துக்குமாா் ஆகியோா் அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது கடந்த 2013 முதல் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிா்ணயம், நிலத்தடிநீா் அனுமதி சான்றிதழ் ஆகியவை இல்லாமல் இந்த நிறுவனம் இயங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் ஆய்வகம் இல்லாமல் பரிசோதனை செய்யப்படாத குடிநீரை, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் லாவண்யாவிடம் மாவட்ட நியமன அலுவலா் பிரபாவதி விசாரணை நடத்தினாா். பின் அங்கிருந்த குடிநீா் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு தற்காலிகமாக குடிநீா் நிலையத்தை மூட உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலா் பிரபாவதி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தில் உரிய சான்றிதழ் மற்றும் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பியும் விளக்கம் அளிக்கப்படவில்லை. தொடா்ந்து வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் முறைகேடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. எனவே குடிநீா் பாட்டில்களை பறிமுதல் செய்து, அந்த நிறுவனம் செயல்பட தடை விதித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT