சிவகங்கை

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதனிடம் சக்கர நாற்காலி, இசிஜி இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை அவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) யசோதாமணி , தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிா்லா கணேசன், வட்டார மருத்துவ அலுவலா் கண்ணன், கண்காணிப்பு அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT