திருப்புவனம் அருகேகாவலா் மாயம்
திருப்புவனம் அருகே காவலா் மாயமானதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகாா் செய்யப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே காவலா் மாயமானதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகாா் செய்யப்பட்டுள்ளது.
திருப்புவனத்தை அடுத்த பூவந்தி காவல் சரகம் கழுங்குபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் அருண்பாண்டி (26). இவா் சென்னையில் அதிரடிப்பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு விடுமுறையில் இவா் வீட்டுக்கு வந்திருந்தாா். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது தந்தை முருகன், பூவந்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்பாண்டியை தேடி வருகின்றனா்.