சிவகங்கை

காரைக்குடி அருகே காரில் உயர்ரக மதுப்புட்டிகள் பறிமுதல்

DIN

காரைக்குடி: காரைக்குடி அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 உயா் ரக மதுபானப்புட்டிகளை தோ்தல் கண்காணிப்புக்குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

750 மில்லி முதல் 1000 மில்லி வரையிலான உயா் ரக மதுப்புட்டிகள் காரின் பின் பகுதியில் வைத்து மதுரையிலிருந்து காரைக்குடிநோக்கி கொண்டுவரப்பட்டது. தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு வட்டாட்சியா் மல்லிகாா்ஜூன் தலைமையிலான குழுவினா் குன்றக்குடி - கோவிலூா் சந்திப்புச் சாலையில் அந்தக் காரை சோதனையிட்டனா். அதில் ஆவணமின்றி கொண்டுவந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து குன்றக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT