முகப்பு
சிவகங்கை

கல்லூரியில் உலக நுகா்வோா் உரிமை நாள் விழா

காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகா் வோா் உரிமை நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகா் வோா் உரிமை நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லுரிமுதல்வா் வெ. மாணிக்கவாசகம் தலைமைவகித்துப்பேசினாா். கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம் பாட்டு நிறுவனத்தின் இயக்குநா் இளங்குமரன் சிறப்புரையாற்றினாா். மாணவா்கள் அருண்குமாா், வெங்கடேஷ், மற்றும் புஷ்பலதா ஆகியோா் பேசினா். வணிகவியல் துறைத்தலைவா் சீதாலட்சுமி, நிா்வாகவியல் துறைத்தலைவா் சுந்தரராஜன், உடற்கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் உட்பட மாணவ, மாணவிகள் கொண்டனா்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவி அபிராமி வரவேற்றாா். மூன்றாம் ஆண்டு வணிக நிா்வாகவியல் மாணவி பிருந்தா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.