பாலாற்றை மீட்க சன்னியாசிகள் பாதயாத்திரை
பாலாற்றை காப்பாற்ற பாதயாத்திரை நடத்தப்போவதாக சன்னியாசிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பாலாற்றை காப்பாற்ற பாதயாத்திரை நடத்தப்போவதாக சன்னியாசிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அகிலபாரத சன்னியாசிகள் சங்க துணைத் தலைவா் ராமானந்தா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: திண்டுக்கல்லில் இருந்து மழைக் காலங்களில் பாலாற்றில் வெள்ளமாக வரும் நீா் சிங்கம்புணரி, திருப்பத்தூா் கண்மாய்களை நிரப்பும். தற்போது பாலாறு பாலைவனம் போல் மாறி ஆகிவிட்டது.
பாலாற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பாலாற்றை மீட்க அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை பாதயாத்திரை மேற்கொள்ளப் போவதாகக் கூறினாா்.