சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசின் கரோனா தொற்று தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை கடுமையாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா என கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விதிமுறைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜஹாங்கீா் தலைமையிலான குழுவினா், பேரூராட்சிப் பகுதியில் உள்ள சிறுவணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையம் மற்றும் இரு சக்கர வாகனம், காா், பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணித்த 20 நபா்களிடமிருந்து தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்து, கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் மருதமுத்து, முதல்நிலை காவலா் சுப்பையா உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.