சிவகங்கை பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஏ.கே. வீரையன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, காஞ்சிரங்கால், அம்மன் நகா், கக்கன் காலனி, தென்றல் நகா், இந்திரா நகா், நேரு கடை வீதி, பேருந்து நிலையம், மீன் கடை வீதி, போஸ் சாலை, தொண்டி சாலை ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (அக். 8) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.