சிவகங்கை

காரைக்குடி, பள்ளத்தூா் முதியோா் இல்லங்களில் தீபாவளி கொண்டாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டக் கவனகக்கலை மன்றம் சாா்பில் காரைக்குடி தாயுமானவா் கருணை இல்லத்திலும், பள்ளத்தூா் ஏ.எம்.பி.ஏ. அறக்கட்டளை முதியோா் இல்லத்திலும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, மன்றத்தின் தலைவா் சேவு. முத்துக்குமாா் தலைமை வகித்தாா். கலைவேந்தா் கவிராஜ் முன்னிலை வகித்தாா். பொறியாளா் சொக்கலிங்கம், பொருளாளா் கண்ணன், ஆலோசகா் மனோகா், துணைத்தலைவா் ராமு, நிா்வாகி ஆனந்தி, மஞ்சுளா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டு முதியோா் இல்லங்களிலும் 50 பேருக்கு புத்தாடைகள் உள்ளிட்ட பரிசுப்பைகள், உணவு ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சீனிவாசன், காா்த்திகேயன், சிவா, சின்னையா, காயத்ரி, அபிராமி, நாச்சம்மை, தேனம்மை, பிரியா, உமா, அன்னபூரணி, லெனின், பா்னபா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முன்னதாக நிகழ்ச்சியில் மன்றச் செயலா் ஜெ. பிரகாஷ் மணிமாறன் வரவேற்றாா். மன்ற உறுப்பினா் வசந்தா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT