சிவகங்கை

காளையாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே திங்கள்கிழமை வயல்வெளியில் வேலை பாா்த்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பகையஞ்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் ராயப்பன் மகன் அருள்சாமி (50). இவா் ஒத்தபுஞ்சை கிராமத்தில் உள்ள வடிவேல் என்பவரது நிலத்தில் திங்கள்கிழமை ‘பவா் டிரில்லா்’ கருவி மூலம் உழவுப்பணி மேற்கொண்டிருந்தாா். அப்போது மோட்டாருக்கு சென்ற மின்சார வயா் அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அருள்சாமி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த காளையாா்கோவில் போலீஸாா் அருள்சாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காளையாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT