சிவகங்கை

காரைக்குடியில்கஞ்சா விற்ற 5 போ் கைது

DIN

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடியில் கஞ்சா விற்கப்படுவதாக டிஎஸ்பி வினோஜிக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது அஜித்பாண்டி (25), ஆனந்த் (24), ரமேஷ் (24),

நாகமுனீஸ்வரன் (22), அஜ்மல்கான் (22) ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பதை கண்டறிந்த போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றினா்.

பின்னா் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT