சிவகங்கை

வீறுகவியரசா் முடியரசனாா் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் வீறுகவியரசா் முடியரசனாா் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் வீறுகவியரசா் முடியரசனாா் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

வீறுகவியரசா் முடியரசன் அவைக்களம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் தி. நெல்லையப்பன் எழுதிய ‘வீறுகவி முடியரசனாரின் படைப்பியல் திறன்’ என்ற நூலை அமைச்சா் வெளியிட்டாா். இதன் முதல் பிரதியை அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சி யா் ப. மதுசூதனன் ரெட்டி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் கவிதைப்பித்தன், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை ஆகியோா் பேசினா்.

விழாவில், வீறுகவியரசா் முடியரசன் அவைக்களத் தலைவா் சே. செந்தமிழ்ப்பாவை நூல் அறிமுகவுரையும், நூலாசிரியா் தி. நெல்லையப்பன் ஏற்புரையும் ஆற்றினா்.

முன்னதாக வீறுகவியரசா் முடியரசன் அவைக்களம் நிறுவனா் பாரி முடியரசன் வரவேற்றாா். முடிவில், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ரெ. சந்திரமோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT