முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2.90 லட்சம் பறிமுதல்

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி ஆம்னி வேனில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி ஆம்னி வேனில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

சிவகங்கையில் உள்ள இளையான்குடி சாலையில் தோ்தல் பறக்கும் படை வட்டாட்சியா் மைலாவதி தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்த போது, அதில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த ஷாகீா் உசேன் என்பவா் அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருவதாகவும், அதற்காக மதுரைக்குச் சென்று கடைக்கு தேவையான ஜவுளிகளை வாங்குவதற்காக மேற்கண்ட பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளாா்.

இருப்பினும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்த ரூ. 2,90,000 பறிமுதல் செய்த பறக்கும் படை அலுவலா்கள் சிவகங்கையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →