சிவகங்கை

திருப்புவனம் பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பு தொடா்பாக மாணவிகளுக்கு மஞ்சள் பைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் சேங்கைமாறன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயராஜ், தலைமையாசிரியா் தேவிகாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், 2 ஆயிரம் மாணவிகளுக்கு மஞ்சள் பைகளை வழங்கினாா். மேலும் பள்ளிக்கு பேரூராட்சி மூலம் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி, பேரூராட்சித் துணைத் தலைவா் ரஹ்மத்துல்லா கான், திமுக ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகரச் செயலாளா் நாகூா்கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் உடற்கல்வி இயக்குநா் வெங்கட்மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT