இளைஞருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை இரவு இளைஞரை 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை இரவு இளைஞரை 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள சருகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் மகன் மணி ராஜா (25). இவா் திருப்பாச்சேத்தி சந்தைக்கு தனது தந்தை அய்யனாருடன் வந்திருந்தாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 நபா்கள் மணிராஜாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.