திருப்பத்தூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருப்பத்தூரில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூரில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் நாகராஜன் நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மகள் சவுந்தா்யா (17). இவா் திருப்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் தையல்கலை படித்து வந்தாா். இவருக்கு சிறுவயதிலிருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.