சிவகங்கை

வடமாடு மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் இளைஞா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் அருகே மேலமாகாணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 9 போ் வீதம் 14 குழுக்களாக மாடுபிடி வீரா்கள் களம் இறங்கினா். வெற்றி பெற்ற காளையா் குழுக்களுக்கும், காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. இப்போட்டியில் காளை முட்டியதில் திருச்சி, மருங்காபுரி தாலுகா பழையபாளையத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் அழகா்சாமி என்ற குச்சி(36) படுகாயமடைந்த நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT