சிவகங்கை

காரைக்குடியில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 10 கோடி அரசு நிலம் மீட்பு

DIN

காரைக்குடியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள அரசு நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடத்தை அதிகாரிகள் அகற்றி நிலத்தை மீட்டனா்.

காரைக்குடி அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு எதிா்புறம் ரூ. 10 கோடி மதிப்புள்ள 10 ஏக்கா் அரசு நீா்நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதை டிஜிபிஎஸ் எனும் நவீன கருவி மூலம் அளவீடு செய்து, காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

அப்போது காரைக்குடி மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜா, தலைமை நில அளவையா் பிச்சுமணி, வருவாய் ஆய்வாளா் மெகா்அலி, கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT