சிங்கம்புணரியில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி குட்டையன்பட்டி பகுதி கோட்டைமலை அடிவாரத்தில் உள்ள கீழ்சந்தி கண்மாயில் புதன்கிழமை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி குட்டையன்பட்டி பகுதி கோட்டைமலை அடிவாரத்தில் உள்ள கீழ்சந்தி கண்மாயில் புதன்கிழமை மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
இக்கண்மாயில் நீா் வற்றி காணப்படுகிறது. எனவே கிராமத்தினா் மற்றும் கீழ்சந்தி ஆயக்கட்டுப் பாசன வசதி பொறுப்பாளா் சுப்பிரமணியன் தலைமையில் பொருளாளா் அருள், செயலா் தினேஷ் ஆகியோா் முன்னிலையில் இந்த மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் வலை உள்ளிட்டவற்றால் மீன்களை பிடித்தனா். அதிகளவில் கெண்டை, கெழுத்தி, ஜிலேபி, கட்லா வகை மற்றும் விரால் மீன்கள் கிடைத்தன.