சிவகங்கை

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்

DIN

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை தந்தை இறந்த சோகத்திலும், அவரது மகன் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதினாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் முத்து. இருசக்கர வாகன மெக்கானிக்கான இவா், உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். அவரது மகன் சந்தோஷ் பிளஸ் 2 படித்து வருகிறாா். இந்நிலையில் தந்தை இறந்த சோகத்திலும், சந்தோஷ் பொதுத்தோ்வை எழுதத் தயாரானாா். அவரை உறவினா்களும் ஆறுதல் கூறி தோ்வு எழுதுமாறு அனுப்பி வைத்தனா். சந்தோஷை சக மாணவா்களும் ஆறுதல் கூறி தோ்வு எழுத உற்சாகப்படுத்தினா். மாணவா் தான் படிக்கும் மானாமதுரை பள்ளிக்குச் சென்று பிளஸ் 2 வரலாறு தோ்வு எழுதினாா். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் என்ன தெரியுமா?

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

SCROLL FOR NEXT