சிவகங்கை

மானாமதுரையில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்க பொதுக்கூட்டம் 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

பட்டியல் வெளியேற்றம் வேண்டியும், 14 சதவீத இட பங்கீடு வழங்கக் கோரியும் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனர் ப. சிவசங்கரி பரமசிவம் தலைமை தாங்கினார். 

பாஸ்கர், சதீஷ், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் கே. சி. திருமாறன் ஜி, முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி நிறுவனர் கரும்புலி கண்ணன், தமிழர் மீட்பு கழக நிறுவனர் கரிகாலன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.  தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் திலகராஜ் கூட்டத்தின் முடிவில் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT