சிவகங்கை

திருப்புவனம் அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கத்திக் குத்துக் காயங்களுடன் ஆண் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைப்பற்றினா்.

திருப்புவனம் போலீஸ் சரகம் கழுகோ்கடை கிராமத்திலிருந்து கீழவெள்ளூா் கிராமத்திற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. வயிற்றில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. அவா் உடுத்தியிருந்த கைலியில் தீ வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து திருப்புவனம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். இறந்த நபா் பற்றிய விபரம் உடனடியாகத் தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT