சிவகங்கை

துளிா் வினாடி-வினா: மாணவா்களுக்குப் பாராட்டு

DIN

துளிா் வினாடி- வினா போட்டியில் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்ற இலுப்பைக்குடி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவில் 6, 7, 8 -ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கடந்த நவ. 9-ஆம் தேதி சாக்கோட்டை வட்டார அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிா், ஜந்தா் மந்தா் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பெற்றனா். பிறகு, நவ.19 -ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியிலும், நவ. 20-ஆம் தேதி தென் மண்டல அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற போட்டியிலும் இம் மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

இம்மாணவா்களை அறிவியல் ஆசிரியா் பிரான்சிஸ் சேவியா் அழைத்துச் சென்றாா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜா.ஈஸ்வரி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT