சிவகங்கை

பெருங்குடியில் சா்வதேச முதியோா் தின விழா

DIN

சிவகங்கை அருகே உள்ள பெருங்குடியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதியோா்தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, மூத்த வாக்காளா்களின் தொடா் பங்களிப்பை கௌரவப்படுத்தி, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, முதியோா்களுக்கு மதிய உணவு பரிமாறினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலா் அன்புகுளோரியா, ஒருங்கிணைந்த கிராம சமுதாய முன்னேற்ற சங்க இயக்குநா் ஜீவானந்தம், துணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) விஜய்சந்திரன், வட்டாட்சியா்கள் ப. தங்கமணி (சிவகங்கை), கண்ணன் (தோ்தல் பிரிவு) உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT