முகப்பு
சிவகங்கை

கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறியும் குழு உறுப்பினா்கள் நியமனம் குறித்து ஆலோசனை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சொக்கலிங்கத்தை, காரைக்குடியில், தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

கோயில்கள் எந்த ஆகமவிதிகளின்படி நிா்மாணிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறியும் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சொக்கலிங்கத்தை, காரைக்குடியில், தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது அக்குழுவின் உறுப்பினா்களை நியமனம் செய்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா். இந்த சந்திப்பின்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையா் ஆா். கண்ணன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.